ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது மாநில தேர்தல் ஆணையம்: மு.க.அழகிரி
மதுரை: தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில், மாநில தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படும் என சந்தேகிப்பதாக, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மேயர் பதவிக்காக தி.மு.க. தரப்பில் பி.பாக்கியநாதன் வேட்புமனு தாக்குதல் செய்தார்.
அப்போது, மத்திய உரம் மற்றும் வேதிப் பொருள் துறை அமைச்சர் மு.க.அழகிரியும் உடன் இருந்தார். வேட்புமனு தாக்கல் செய்த பின், மத்திய அமைச்சர் அழகிரி கூறியதாவது, ஆளுங்கட்சியினர் எழுதியுள்ள சுவர் விளம்பரங்கள் குறித்து, மாநில தேர்தல் ஆணையத்திற்கு பலமுறை புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை.
புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு நிறுத்தியுள்ளனர். அ.தி.மு.க வேட்பாளர் வி.வி.ராஜன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த போது, தேர்தல் விதிமுறை நடந்தது குறித்து, செய்தித்தாளில் கூட செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையான முறையில் நடக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே செயல்படும், என்றார்.












Click it and Unblock the Notifications