பிலிப்பைன்ஸ்சில் புயல்- மழை: 18 பேர் பலி, 35 பேர் மாயம்
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் பேய் மழையால் இதுவரை 18 வரை பலியாகி உள்ளனர். 35 பேரை காணவில்லை.
பசிபிக் கடலில் ஏற்பட்ட புயல், பிலிப்பைன்ஸ் நாட்டின் நெசாட் பகுதியை கடுமையாக தாக்கியுள்ளது. 120 கி.மீ. வேகத்தில் தரையை கடந்த புயல் மணிலா விரிகுடா பகுதியின் சுற்றுபுறங்களில் கடும் பொருட்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. புயலால் ஏற்பட்ட மழையால், பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள பெரும்பாலான அணைக்கட்டுகள் நிரம்பி உள்ளன.
இதனால் மணிலா பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக லூசன் நகரில் 10 லட்சத்திற்கு மேற்பட்டோர் இருளில் தவித்தனர். சீரமைப்பு பணியில் துரித மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
லூசன் நகரில் ஏற்பட்ட நிலஅதிர்வு, வெள்ளத்தால், 60க்கும் மேற்பட்ட சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகம், மணிலா ஒசன் பார்க் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மணிலாவின் கடற்கரையில் இருந்த நட்சத்திர ஹோட்டல் மீது கடல் அலை பெரிய அளவில் தாக்கியதில், கடல்நீர் ஹோட்டலுக்குள் புகுந்தது.
ஹோட்டலில் தங்கியிருந்த 4,000க்கும் மேற்பட்டவர்களில் 60 சதவீதம் மக்கள் பாதுக்காப்பாக இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சிலரை காணாவில்லை. இந்த புயலில் இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 35க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
இதுகுறித்து, லூசன் நகர மேயர் அல்பிரிடோ லிம் கூறியதாவது, பெரிய அளவிலான அலைகள் மணிலா பகுதியை தாக்கியுள்ளது. இது போன்ற வெள்ளம் இப்பகுதி இதற்கு முன் ஏற்பட்டதாக தெரியவில்லை, என்றார்.
இந்நிலையில் நெசாட் பகுதியை இந்த வாரத்தில் மற்றொரு புயல் தாக்க இருப்பதாக எச்சரித்து உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட புயலில் 200க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
-
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்!












Click it and Unblock the Notifications