தேர்தலை புறக்கணித்து கிராமப்புற வீடுகளில் கருப்புக் கொடி
Subscribe to Oneindia Tamil
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேர்தலை புறக்கணித்து கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி உள்ளனர்.
ராஜபாளையம் அருகே உள்ளது முக்தந்தி கிராமம். இங்கு 2 பிரிவினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு பிரிவினர் உள்ளாட்சி தேர்தலை ஓட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மற்றொரு பிரிவினர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். இதற்கு கிழவிகுளம் கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதை கண்டித்து முக்தநதி கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் 350 வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து உள்ளனர். முக்தநதி கிராமத்தில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டு உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications