உலகத் தமிழர் பொருளாதார மாநாடு: துபாயில் தமிழக வணிகர்களுக்கு உற்சாக வரவேற்பு
துபாய்: துபாயில் நடந்து வரும் இரண்டாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள வந்த வணிகப் பிரமுகர்களுக்கு கடந்த 30ம் தேதி நண்பகல் துபாய் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரண்டாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு கடந்த 1-ம் தேதி துபாயில் துவங்கியது. இந்த மாநாடு நாளை வரை நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தில் இருந்து சென்ற வணிகப் பிரமுகர்களுக்கு கடந்த 30ம் தேதி நண்பகல் துபாய் விமான நிலையத்தில் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநாட்டு கன்வீனர் முனைவர் சம்பத் தலைமையில் வரவேற்புக் குழுவினர் பிரமுகர்களுக்கு பூச்செண்டு கொடுத்து சிறப்புற வரவேற்றனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநாடு சிறப்புற நடைபெற துபாயில் உள்ள தமிழக நிறுவனமான ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமம் முக்கியப் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
அமீரகத் தமிழர்களின் வரவேற்பினை ஏற்றுக் கொண்ட வணிகப் பிரமுகர்கள் தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த மாநாட்டைமத்திய கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி துவக்கி வைத்து உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications