மைக்கைப் பிடுங்கிச் சென்ற போலீஸ்- பிரவீன்குமார் பெயரைப் பயன்படுத்திய விஜயகாந்த்!

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது மாநில தேர்தல் ஆணையம். ஆனால் விஜயகாந்த் குறிப்பிட்டது மத்திய தேர்தல் ஆணையத்தின் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரவீன்குமாருக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கரண்கோவிலில் நேற்று இரவு பிரசாரம் செய்தார் விஜயகாந்த்.அவர் பிரசாரம் செய்வதற்கான நேரத்தைக் குறிப்பிட்டு போலீஸாரிடம் அனுமதி வாங்கியிருந்தனர் தேமுதிகவினர். ஆனால் வழியில் தாமதமாகி விட்டதால் குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டித்தான் விஜயகாந்த்தால் வர முடிந்தது.
இதையடுத்து போலீஸார் திடீரென மைக் செட்டுகள், ஆம்ப்ளிபயர் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து கொண்டு சென்று விட்டனர். இதையடுத்து தேமுதிக நிர்வாகிகள் கோபமடைந்து டிஎஸ்.பி. மதிவாணனை முற்றுகையிட்டனர். இருப்பினும் பலன் ஏதும் இல்லை.
இதையடுத்து விஜயகாந்த்துக்குத் தகவல் கொடுத்தனர். அவரும் வந்து சேர்ந்தார். பிறகு அவரிடம் வேறு ஒரு மைக் கொடுக்கப்பட்டது. அந்த மைக்கைப் பிடித்த விஜயகாந்த் ஆவேசமாக பேசினார். அப்போது அவர் பேசுகையில், சங்கரன் கோவில் போலீஸ் என்ன புதுசா, வழியில நான் எத்தனை போலீசை பார்த்தவன் தெரியுமா? நான் ஒரு எதிர்க்கட்சி தலைவர். எனக்கு கொடுக்க வேண்டிய முழு பாதுகாப்பை நீங்க தரணும்.
இது உங்களுக்கு தெரியாதா? இதென்ன புதுசா ஆட்டம் போடுறீங்க. குறிப்பிட்ட நேரம் தவறி வந்தாலும், தேர்தல் நேரம் அனுமதியோ, முன் அனுமதியோ பெறணும் என்கிற அவசியம் இல்ல.
நான் விபரம் தெரியாதவன்னு நினைச்சீங்களா? மக்களைக்காக்க வேண்டியதுதான் போலீசின் வேலை. அதை விட்டுட்டு இந்த மாதிரி செய்யச் சொல்லி யாரேனும் சொன்னாங்களா?
முன்னால நாங்க ஒரு எம்.எல்.ஏவா இருந்தோம். இப்ப 27 எம்.எல்.ஏவாக இருக்குறோம். நாளைக்கு நாங்கதான். இதை நல்லா ஞாபகம் வச்சுக்குங்க.
உங்ககிட்ட நான் பேசனும்னு அவசியமில்ல. தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்கிட்ட நான் பேசிக்குறேன். உங்க நண்பன்னு காவல்நிலையத்தில் போர்டு போட்டிருக்கீங்களே. முதல்ல அத தூக்கி தூர வீசுங்க என்று படு கோபமாக பேசி விட்டு அங்கிருந்து கிளம்பினார்.
உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை அதை நடத்துவது மாநில தேர்தல் ஆணையம்தான். அதன் ஆணையராக இருப்பவர் சோ. அய்யர். இவர் மத்திய தேர்தல் ஆணையத்துக்கு சற்றும் சம்பந்தம் இல்லாதவர். பிரவீன்குமார், மத்திய தேர்தல் ஆணையத்தின் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ஆவார். சோ. அய்யரிடம் பேசுகிறேன் என்று சொல்வதற்குப் பதில் பிரவீன்குமாரிடம் பேசிக் கொள்கிறேன் என்று நேற்று விஜயகாந்த் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications