சத்தியமூர்த்தி பவனில் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் டிஸ்மிஸ்- தங்கபாலு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேட்பாளர் மாற்றம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில், காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழைந்து சூறையாடலில்

ஈடுபட்டவர்களை கட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்வதாக மாநிலத் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி 114 வார்டு கவுன்சிலர் பதவிக்கு முருகவேல் என்பவர் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படிருந்தார். இந்நிலையில் வேட்புமனி வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளான திங்கள்கிழமையன்று அன்பழகன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய முருகவேல் ஆதரவாளர்கள் நாற்காலி, கதவு, ஜன்னல்கள், கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். தங்கபாலுவின் உருவப் படத்தையும் உடைத்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட அப்பாஸ், ரியான் பஷீர், முருகவேல் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக தங்கபாலு கூறியுள்ளார்.

கடந்த சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி கண்ட படு தோல்விக்குப் பொறுப்பேற்பதாக கூறி தலைவர் பதவியை ராஜினாமா செய்து கட்சித் தலைமைக்கு அனுப்பி வைத்தார் தங்கபாலு. அது ஏற்கப்பட்டதா, இல்லையா என்பதே இன்னும் தெரியவில்லை. இதனால் அவரும் தலைவர் பதவியில் நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் பலரை தொடர்ந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவுகளை பறக்க விட்டு வருவது காங்கிரஸ் எதிர்த் தரப்பினரை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+