உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் ஆதரவு திமுகவுக்கு உண்டு: கி.வீரமணி
சென்னை: உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்கும் என தி.க. தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தி.க.தலைவர் கி.வீரமணி கூறியதாவது:
திருச்சி இடைத்தேர்தல் மற்றும் அதையடுத்து நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து, திருச்சியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தற்போது ஆளுங்கட்சி பழிவாங்கும் நோக்கத்தோடு மட்டுமே செயல்படுவது தெரிகிறது. குற்றவாளிகள் எந்த கட்சி என்று பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், தற்போதைய அப்படி இல்லை. தவறு செய்தவர்களுக்கு சாதகமாக நாங்கள் பேசவில்லை.
மேலும் தி.க.வின் கோட்பாடுகளுக்கும், கொள்ளைகளுக்கும் தி.மு.க. கட்சியின் நெருக்கம் அதிகம். திராவிட இயக்கத்தின் பார்வைக்கு விரோதமாக செயல்பட்டு வரும் ஆளுங்கட்சியை எதிர்த்து, தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு, கழகத்தினர் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications