முன்னாள் சபாநாயகர் காளிமுத்து மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு
Subscribe to Oneindia Tamil
மதுரை: முன்னாள் சபாநாயகர் காளிமுத்து மகன் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக போலீசார் வழக்குப் பதிந்து உள்ளனர்.
மதுரை மாவட்ட ஊராட்சி கவுன்சிலுக்கு அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்து மகன் டேவிட் அண்ணாதுரை போட்டியிடுகிறார். இவர் திருமங்கலம் தருமத்துப்பட்டி பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது ஏராளமான வாகனங்கள் பின்தொடர்ந்து சென்றது.
இதையடுத்து தேர்தல் விதியை மீறியதாக தருமத்தப்பட்டி வி.ஏ.ஓ. முருகேசன், ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் டேவிட் அண்ணாதுரை மற்றும் சிலர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications