உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணி: வெளிமாநில போலீசார் வருகை
நெல்லை: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 11,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 2,000 என்சிசி மாணவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் டிஐஜி வரதராஜுலு உத்தரவின் பேரில் நெல்லை எஸ்.பி. விஜயேந்திர பிதாரி, தூத்துக்குடி எஸ்.பி. நரேந்திர நாயர், கன்னியாகுமரி எஸ்.பி. பாலசுப்பிரமணியன், நெல்லை மாநகரம் துணை கமிஷனர்கள் மாஸ்டர்லியோ, ஜெயபாலன் ஆகியோர் தலைமையில் 11,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் 3,000 போலீசாரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2,000 போலீசாரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,000 போலீசாரும், நெல்லை மாநகரத்தில் 2,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இவர்களோடு தமிழக சிறப்பு போலீசான மணிமுத்தாறு பட்டாலியன் ஆண்கள் பிரிவான 9வது பட்டாலியன் மற்றும் பெண்கள் பிரிவான 12வது பட்டாலியனில் இருந்து 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
மேலும் கூடுதல் பாதுகாப்பு பணியில் கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த சிறப்பு படை போலீசார் 500 பேரும், அதிரடிப் படை போலீசார் 400 பேரும், கமான்டோ படையினர் 2,000 பேரும், இவர்களுடன் முன்னாள் ராணுவத்தினர், போலீசார், என்சிசி மாணவர்களும் பாதுகாப்பு பணியி்ல் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் பாதுகாப்பையொட்டி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலுள்ள 12 நிரந்தர சோதனைச் சாவடிகளை தவிர தற்போது புதிதாக 21 சோதனைச் சாவடிகள் துவங்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications