4 செயற்கை கோளுடன் ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. சி-18-ன் கவுண்ட் டவுன் துவங்கியது
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ மூலம் வரும் 12ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ள பி.எஸ்.எல்.வி- சி18 ராக்கெட் கவுண்ட்- டவுன் இன்று காலை 9 மணிக்கு துவங்கியது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி - சி 18 ராக்கெட்டை வரும் 12ம் தேதி விண்ணில் செலுத்துள்ளது. இதன்மூலம் தட்பவெப்பநிலை மற்றும் காலநிலை குறித்து ஆராய்ச்சி செயற்கை கோள் உட்பட 4 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதில் மூன்று செயற்கைக்கோள்கள் சிறிய ரகத்திலானவை, 4வது செயற்கைக் கோள் பெரியதாகும்.
ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்ட் டவுன் இன்று காலை 9 மணிக்கு துவக்கப்பட்டது. இதன் இறுதி கவுன்ட்-டவுன் நாளை மறுநாள் துவக்கப்படும். ராக்கெட்டில் முதல்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications