Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 செயற்கை கோளுடன் ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. சி-18-ன் கவுண்ட் டவுன் துவங்கியது

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ மூலம் வரும் 12ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ள பி.எஸ்.எல்.வி- சி18 ராக்கெட் கவுண்ட்- டவுன் இன்று காலை 9 மணிக்கு துவங்கியது.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி - சி 18 ராக்கெட்டை வரும் 12ம் தேதி விண்ணில் செலுத்துள்ளது. இதன்மூலம் தட்பவெப்பநிலை மற்றும் காலநிலை குறித்து ஆராய்ச்சி செயற்கை கோள் உட்பட 4 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதில் மூன்று செயற்கைக்கோள்கள் சிறிய ரகத்திலானவை, 4வது செயற்கைக் கோள் பெரியதாகும்.

ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்ட் டவுன் இன்று காலை 9 மணிக்கு துவக்கப்பட்டது. இதன் இறுதி கவுன்ட்-டவுன் நாளை மறுநாள் துவக்கப்படும். ராக்கெட்டில் முதல்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+