கட்சி கட்டுப்பாட்டை மீறிய 6 தேமுதிகவினரை நீக்கினார் விஜயகாந்த்
சென்னை: தே.மு.தி.க.வில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட 6 நிர்வாகிகளை, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கட்சியில் இருந்து நீக்கி உள்ளார்.
இதுகுறித்து தே.மு.தி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர், ஒரத்தநாடு ஒன்றிய செயலர் தேவேந்திரன், கரூர், க.பரமத்திய ஒன்றிய செயலர் ஏ.ராமசாமி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலர் அசோகன், ஈரோடு, அரச்சலூர் பேரூராட்சி செயலர் லோகநாதன், திருப்பூர் (தெற்கு) சின்னக்காம்பாளையம் பேரூராட்சி செயலர் வரமூர்த்தி, அதே மாவட்டத்தை சேர்ந்த ருத்ராவதி பேரூராட்சி செயலர் பாலசுப்ரமணியம் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டுள்ளனர்.
மேலும் கட்சிக்கு களங்கம் மற்றும் அவப்பெயர் உண்டாகும் வகையில் நடந்த 6 பேரை, அவர்கள் வகித்த பொறுப்புகள் மற்றும் கட்சி அடிப்படை பதிவியில் இருந்து நீக்கப்படுகின்றனர். எனவே, கட்சியில் இருந்த நீக்கப்பட்ட இந்த 6 பேருடன் கட்சி நிர்வாகிகளோ, தொண்டர்களோ எந்த தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications