Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தை சீரழித்த திராவிட கட்சிகளை ஒழிக்கவே பாமக தனித்துப் போட்டி: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

Ramadoss
ஈரோடு: தமிழகத்தில் இலவச மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்குவதால் வளர்ச்சி ஏற்பட்டு விடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடும், பாமக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம், ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தில் நடந்தது.

இக் கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், தமிழகத்தை கடந்த 44 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகள், மாநிலத்தை சின்னாபின்னமாக்கி விட்டன. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தில் இருந்த வறுமையை மாற்ற முடியவில்லை.

முதலில் மக்களின் வறுமையை ஒழிப்போம் என கூறியவர்கள், தற்போது வறுமைக்கான அளவுக்கோல் என்ன என தெரியவில்லை என்கின்றனர். இந்த உள்ளாட்சி தேர்தல், தற்போது உள்ள ஊழல் கட்சிகளுக்கும், நேர்மையான பாமகவுக்கும் இடையேயான போட்டியாக கொள்ளலாம்.

திராவிடக் கட்சிகளின் அத்தியாயத்தை முடிவுக்கு கொண்டு வரவே பாமக தனித்து போட்டியிடுகிறது. இனி திராவிட கட்சிகளுடன் எந்த நிலையிலும் கூட்டணி அமைக்கப்படாது. திராவிட கட்சிகளே இல்லாத நிலையை உருவாக்குவதே, பாமகவின் வருங்காலத் திட்டம்.

தமிழகத்தை சீரழித்த திராவிட கட்சிகளை ஒழிக்கவே பாமக தனித்துப் போட்டியிடுகிறது.

திராவிட கட்சிகளின் கொள்ளையே, கொள்ளையடிப்பது தான். மதுவை கொடுத்து மாநிலத்தையே சீரழித்துவிட்டனர். இலவசங்களை கொடுத்து சுயமரியாதையை கெடுத்துவிட்டனர். மக்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர் வழங்குவதால், நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டு விடாது.

நாட்டில் தரமான கல்வியும், இலவச மருத்துவமும் தான் தேவை என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தை சீரழித்த திராவிடக் கட்சிகளுக்கு, நீதிமன்றம் மூலம் தண்டனை அளிக்க முடியாது. ஆனால் மக்கள் மன்றத்தால் தண்டனை அளிக்க முடியும், என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+