விருதுநகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை தடுத்த அ.தி.மு.க. வேட்பாளரை உதைத்த திமுகவினர்
விருதுநகர்: விருதுநகர் ரோசல்பட்டியில் வாக்காளர்களுக்கு பண கொடுத்ததை தடுத்த அ.தி.மு.க. ஊராட்சித் தலைவர் வேட்பாளர் பாலகிருஷ்ணனை திமுக-வினர் அடித்து உதைத்தனர்.
விருதுநகர் அருகே ரோசல்பட்டி தி.மு.க. சார்பில் ஊராட்சி தலைவர் பதவிக்கு சேதுராமனும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஹரிகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர். இவருடன், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் மாரிமுத்து, முத்தால் நகரை சேர்ந்த சங்கர், முருகன், கோபால் ஆகியோர், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வந்தனர்.
தகவல் அறிந்த அ.தி.மு.க. வேட்பாளர் பாலகிருஷ்ணன் விரைந்து சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணன், மாரிமுத்து, சங்கர், முருகன், கோபால் ஆகியோர், பாலகிருஷ்ணனை அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன் விருதுநகர் மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் பாலகிருஷ்ணனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விருதுநகர் பாண்டியன் நகர் மெயின் ரோட்டில் 100க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டி.எஸ்.பி. ராமூர்த்தி, பாலகிருஷ்ணனை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications