திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த வேட்பாளரின் தம்பி தலையில் கல்லைப் போட்டுக் கொலை
மதுரை: மதுரை அருகே திருமங்கலத்தில், திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையில் கல்லைப் போட்டுக் கொடூரமாக கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர் நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் போஸ் என்பவரின் தம்பி ஆவார்.
திருமங்கலம் உள்ள பட்சகோப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் போஸ். இவர் திருமங்கலம் நகராட்சி 5வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இவரது தம்பி சிவலிங்கம். 28 வயதான சிவலிங்கம் இரவில் தனது ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தின் திண்ணையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது அங்குவந்த சிலர், பெரிய சிமென்ட் சிலாப்பை எடுத்து சிவலிங்கத்தின் தலையில் போட்டுள்ளனர். இதில் தலை நசுங்கி சிவலிங்கம் உயிரிழந்தார்.
தேர்தல் தகராறு காரணமாக கொலை நடந்ததா அல்லது முன்விரோதம் காரணமா என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications