காங்கிரசை சீண்டினால் சும்மா இருக்க மாட்டேன்: ஈ.வி.கே.எஸ் .இளங்கோவன் எச்சரிப்பு

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: தி.மு.க-வினர் காங்கிரஸ் கட்சியினரை சீண்டினால் சும்மா இருக்கமாட்டேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விருதுநகர் நகர்மன்ற தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்திகா கரிக்கோல்ராஜ் போட்டியிடுகின்றார். அவரை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியதாவது, விருதுநகர் நகராட்சி தலைவராக இருந்த கார்த்திகா கரிக்கோல்ராஜ் இங்குள்ள தி.மு.க. அமைச்சரிடம் சிறைப் பறவையாக இருந்தார்.

இதனால், நகராட்சி நலத்திட்ட பணிகளை முன்னாள் அமைச்சரும், அவரது தம்பியும் தான் செய்து வந்தனர். ஆனால், அப்பணிகள் முறையாக செய்யப்படவில்லை. இங்குள்ள முன்னாள் அமைச்சருக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இனிமேல் தி.மு.க.வினர் காங்கிரஸ் கட்சியினரை சீண்டினால் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டேன்.

இப்போது நான் அமைச்சர் இல்லை என்றாலும் மத்திய அமைச்சர்களிடம் எனக்கு செல்வாக்கு இருக்கிறது. அதன் மூலம் தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு வலியுறுத்துவேன். தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும். அதற்கு பொதுமக்கள் அனைவரும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும், என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+