ஓட்டுக் கேட்ட போன வேட்பாளர் மலைப் பாம்பைப் பிடித்தார்-குளச்சலில் ஒரு திரில் பிரசாரம்
குளச்சல்: நெட்டாங்கோட்டில் வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டு சென்ற வேட்பாளருக்கு மலைப்பாம்பைப் பிடிக்கும் வேலை கிடைத்தது. அவரும் தயங்காமல் தனது ஆதரவாளர்களோடு சேர்ந்து பாம்பைப் பிடித்து ஏரியா மக்களிடம் பாராட்டைப் பெற்றார்.
இது குறித்த ருசிகரமான தகவல் இதோ, கன்னியாகுமரி நெட்டாங்கோடு கிராம பஞ்சாயத்தில் ஒன்றாவது வார்டு வேட்பாளராக போட்டியிடுபவர் ஐயப்பன். இவர் நெட்டாங்கோடு அக்கராமணம் குளக்கரை பகுதியில் அமைத்துள்ள வீடுகளில் மாலை நேரத்தில் வாக்கு கேட்டு தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.
அப்போது, அப்பகுதியில் ஒன்பது அடி நீளமுள்ள மலைபாம்பு ஒன்று வளைந்து நெளிந்து சென்றுள்ளது. அதை பார்த்த வேட்பாளர் ஆதரவாளர்கள் சத்தம் போட, உஷாரான வேட்பாளர் ஐயப்பன் உடனே தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அந்த மலைப்பாம்பை மடக்கி பிடித்தார். ஆனால் அதற்குள் பலர் 'எஸ்கேப்' ஆகி இருந்தனர்.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து அந்த மலைப்பாம்பை பிடித்து சென்று காட்டில் விட்டனர். பொது மக்களிடம் வாக்கு கேட்டு சென்ற வேட்பாளருக்கு வாக்கு-வுடன் சேர்த்து பாம்பும் கிடைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications