புதுவை இடைத் தேர்தலில் அமோக வாக்குப் பதிவு-82 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின
புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி இடைத்தேர்தலில் மிக மிக விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. வாக்குப் பதிவின் இறுதியில் 82 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி இந்திரா நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ரங்கசாமி இன்னொரு தொகுதியிலும் வெற்றி பெற்றதால், இந்திரா நகரிலிருந்து ராஜினாமா செய்தார். இதனால் அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.
அத்தொகுதியில் தனது என்.ஆர். காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக, அண்ணன் மகன் தமிழ்ச்செல்வனை நிறுத்தியுள்ளார் ரங்கசாமி. காங்கிரஸ் சார்பில் ஏ.கே.டி. ஆறுமுகம், அதிமுக சார்பில் பாஸ்கரன் உள்பட 7 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்தத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 29,005 ஆகும். இவர்களுக்காக 13 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. அதில் 6 சாவடிகள் பதட்டமானவை என அறிவிக்கப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டது.
காலையில் அங்கு சாரல் மழை பெய்ததால் வாக்குப் பதிவு ஆரம்பமே மந்தமாக இருந்தது. இருப்பினும் மழை நின்றதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு விறுவிறுப்படைந்தது.
இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் நடந்த வாக்குப் பதிவில், மாலை 5 ம்ணியளவில் 82 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப் பதிவு இறுதி நிலவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications