அத்வானியின் இரண்டாவது கட்ட யாத்திரை மதுரையில் இருந்து துவக்கம்
மதுரை: பாஜக மூத்த தலைவர் அத்வானியின் இரண்டாவது கட்ட யாத்திரை மதுரையில் இருந்து துவங்குகிறது.
ஊழலுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரையை துவங்கியுள்ளார்.
முதற்கட்ட யாத்திரையை பீகாரில் துவங்கிய அவர் மொத்தம் 38 நாட்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளார்.
அக்டோபர் 27ம் தேதி அத்வானி மதுரை வருகிறார். அங்கிருந்து அவர் தனது 2வது கட்ட யாத்திரையை தொடங்குகிறார். மதுரையில் துவங்கும் இந்த யாத்திரை திருவனந்தபுரம் வரை செல்கிறது. அக்டோபர் 27ம் தேதியன்று இரவு, மதுரை வடக்கு மாசி வீசி- மேல மாசி வீதி சந்திப்பில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகின்றார்.
மறுநாள் காலை மதுரையிலிருந்து புறப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், புளியங்குடி, கடையநல்லூர் வழியாக, திருவனந்தபுரத்திற்கு யாத்திரை செல்கிறது. பாஜக தலைமை இதை அறிவித்துள்ளது.