தூத்துக்குடி அருகே தேர்தல் அதிகாரியை கண்டித்து உண்ணாவிரதம்: பாமக வேட்பாளர் கைது
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தேர்தல் அதிகாரியை கண்டித்து உண்ணாவிரதம் இருந்த பாமக வேட்பாளரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தலைவர் பதவிக்கு பாமக மாநில கொள்கை விளக்க அணித் தலைவர் வியனரசு போட்டியிடுகிறார்.
ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தேர்தல் அதிகாரி கலாவதி அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக வியனரசு துவக்கத்தில் இருந்தே குற்றம்சாட்டி வந்தார்.
இந்த நிலையில் பேரூராட்சி தேர்தல் அதிகாரி கலாவதியின் செயல்பாடுகளைக் கண்டித்தும், அவரை உடனே அங்கிருந்து மாற்றக் கோரியும் பேரூராட்சி அலுவலகம் முன்பு வினயரசு திடீர் என்று உண்ணாவிரதம் இருந்தார்.
பேரூராட்சி முன்பு அனுமதி பெறாமல் திடீர் உண்ணாவிரதம் இருந்த வியனரசை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications