ஓட்டுக்கு பணம் கொடுககும் அதிமுக; தடுக்காத தேர்தல் ஆணையம்- மார்க்சிஸ்ட்

நிருபர்களிடம் அவர் பேசுகையில், தமிழக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி தனது அதிகார பலத்தை பயன்படுத்தி ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகிறது. தேர்தலை நியாயமாக நடத்த வேண்டிய மாநில தேர்தல் ஆணையம், இதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது வருத்தத்தை அளிக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலைமையாக செயல்பட்டது. அதிலும் தமிழக தேர்தல் ஆணையர் பிரவீண்குமார் நேர்மையாக செயல்பட்டார். ஆனால் அதே அதிகாரம் கொண்ட மாநில தேர்தல் ஆணையம், தேர்தலை முறையாக நடத்தவில்லை.
தமிழகம் முழுவதுமே காவல்துறை நேர்மையாக செயல்படவில்லை. போலீசார் கட்டபஞ்சாயத்து செய்து சம்பாதிக்கின்றனர்.
புதிய பஞ்சாயத்து ராஜ் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் உள்ளாட்சி அமைப்புகளை திமுக ஆண்டுள்ளது, அதிமுக அரசு 3 முறை மாநிலத்தை ஆண்டுவிட்டது. ஆனாலும் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் போதுமான நிதியை இரு கட்சிகளும் ஒதுக்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications