அதிமுக போட்டி வேட்பாளர்கள் நீக்கம்- ஜெயலலிதா அதிரடி
மதுரை: உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட 200க்கும் மேற்பட்டவர்களை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக, உள்ளாட்சித் தேர்தலில் சில அதிமுகவினர் செயல்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த சரணவன், கர்லின் கணேசன் உட்பட 10 பேர், காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, ரவிச்சந்திரன் உட்பட 8 பேர், திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தேவகி செல்வராஜ் உட்பட 10 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், சேலம், ஈரோடு, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா












Click it and Unblock the Notifications