முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கு இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் முதல் கட்ட பிரசாரம் முடிவுக்கு வருகிறது.

தமிழகத்தில் அக் 17, 19 ஆகிய இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. முதல் கட்டத் தேர்தலில் 10 மாநகராட்சிகளுக்கும், 60 நகராட்சிகளுக்கும், 259 பேரூராட்சிளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இரண்டாவது கட்டமாக 19ம் தேதியன்று 65 நகராட்சிகளுக்கும், 270 பேரூராட்சிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர் எந்த ரூபத்திலும் பிரசாரம் செய்யக் கூடாது.

1 லட்சத்து 32 ஆயிரத்து 467 உள்ளாட்சி பதவிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி தொடங்கியது. மனு பரிசீலனை முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 4 லட்சத்து 11 ஆயிரத்து 767 பேர் தற்போது களத்தில் உள்ளனர்.

இந்தத் தேர்தலில் 4 கோடியே 63 லட்சத்து 37 ஆயிரத்து 397 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த உள்ளனர்.

10 மாநகராட்சி, 60 நகராட்சி, 259 பேரூராட்சி, 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வரும் 17ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+