குரங்கு பயத்தில் 2வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி பலி
காரைக்கால்: காரைக்காலில் கல்லூரியில் சுற்றி திரிந்த குரங்குகளுக்கு பயந்து ஓடிய மாணவி, 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார்.
காரைக்காலை அடுத்த நிரவிகீழராஜ வீதியை சேர்ந்த நைனா மரைக்காயர் மகள் மெகபூப்நிஷா(19). அதே பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி. இந்த கல்லூரியில் அவ்வப்போது குரங்குகள் உலா வந்து, மாணவிகளை பயப்படுத்தி வருவது சகஜம்.
இந்நிலையில் நேற்று கல்லூரியின் பழைய கட்டத்தில் உள்ள 2வது மாடியில் உள்ள வகுப்பறையில் மெகபூப்நிஷா இருந்துள்ளார். அப்போது அங்கு சில குரங்குகள் வந்துள்ளன. இதில் மிரண்ட மெகபூப்நிஷா ஓடிய போது, மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
அவர் குரங்குகளை பார்த்த ஓடியதால் பயத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. படுகாயமடைந்த மாணவியை மீட்டு மற்ற மாணவிகள், காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், மெகபூப்நிஷா உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications