பாபுவா நியூ கியூனியாவில் விமான விபத்து: 28 பேர் பலி
மடங்கு: பாப்புவா நியூ கியூனியாவில் புயலில் சிக்கிய விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில், 28 பேர் பலியாகினர். 4 பேர் காயத்துடன் உயிர்தப்பினர்.
ஆஸ்திரேலியா நாட்டிற்கு மிக அருகில் உள்ள மிக சிறிய குடியரசு நாடு பாப்புவா நியூ கியூனியா. பி.என்.ஜி டாஸ் 8 என்ற ஒரு பயணிகள் விமானம் லாயி என்ற பகுதியில் இருந்து மடங்கு என்ற இடத்திற்கு பறந்தது. இதில் விமான ஓட்டுநர்கள் 2 உட்பட 32 பேர் பயணித்தனர்.
மடங்கு பகுதியில் இருந்த 20 கி.மீ தொலைவில் உள்ள காட்டு பகுதி வழியாக வானில் பறந்து போது, கடும் சூறாவளி மற்றும் மழை பெய்தது. இதையடுத்து விமானம் மிக குறைவான உயரத்தில் பறந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் விபத்திற்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு மற்றும் மருத்துவ குழுவினர் 28 பேரின் இறந்த உடல்களை மீட்டனர். மேலும் விபத்தில் பயணித்த 2 விமானிகள், 1 ஆஸ்திரேலியர், 1 நியூஸ்லாந்தியர் என 4 பேர் உயிருடன் மீ்ட்கப்பட்டனர்.
கடும் புயல் காரணமாக சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும், விபத்து நடந்த காட்டு பகுதி கடற்கரை பகுதியை ஒட்டி காணப்பட்டதால் நீர்வழியாக மீட்பு பணிகள் நடந்தது.
இதுகுறித்து விபத்தில் உயிரோடு மீட்கப்பட்டவர் கூறியதாவது, விமானம் கடும் மழை மற்றும் புயலில் சிக்கி தவித்தது. மிக குறைந்த உயரத்தில் பறந்த போதும், புயலில் சிக்கிய விமானம் 2 துண்டாக உடைந்து கீழே விழுந்தது. அப்போது உயிர் தப்பும் பொருட்டு விமானத்தில் இருந்து குதிக்க முயன்ற போது, எனது கைகளும், முதுகிலும் கடும் தீக்காயம் ஏற்பட்டது, என்றார்.
விமானத்தில் பயணித்த பெரும்பாலான பயணிகள், தங்கள் பிள்ளைகளின் கல்லூரி பட்ட சான்றிதழை பெற பயணித்தவர்கள் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications