நடுரோட்டில் போலீஸ் அதிகாரியுடன் மாஜி காவலர் கட்டிப்புரண்டு சண்டை
வேலூர்: நடுரோட்டில் போலீஸ் அதிகாரி ஒருவரும், முன்னாள் போலீஸ்காரர் ஒருவரும் கட்டிப் புரண்டு சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் அடுத்த சித்தேரி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்றார். இவர் அடிக்கடி வேலூர் தெற்கு காவல் நிலையத்துக்கு வந்து, போலீஸ் அதிகாரிகளை பற்றி தரக்குறைவாக திட்டி செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.
இதேபோல வேலூர் தெற்கு காவல் நிலைய வாசலில் நின்று, தரக்குறைவாக பேசி உள்ளார். அப்போது, முதல்வர் ஜெயலலிதா பாதுகாப்பு பணிக்காக வேலூருக்கு வந்திருந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர், பார்த்தசாரதியை அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளார்.
ஆனால், இதைக் கேட்காமல் , திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் அதிகாரியையே, பார்த்தசாரதி அவதூறாக பேசியுள்ளார். இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த அதிகாரி, பார்த்தசாரயை அடித்து உதைத்தார். பதிலுக்கு பார்த்தசாரதியும் தாக்கினார்.
2 பேரும் ரும் நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை போட்டனர். இதில் 2 பேருக்கும் ரத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த மற்ற போலீசார் விரைந்து சென்று பார்த்தசாரதியிடம் இருந்து அந்த அதிகாரியை காப்பாற்றினர்.
அந்த அதிகாரிகயை உடனே அருகில் உள்ள மருத்துவனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பார்த்தசாரதி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications