கட்சி கட்டுப்பாட்டை மீறிய தே.மு.தி.க. நிர்வாகிகள் நீக்கம்
கன்னியாகுமரி: கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கூறி கன்னியாகுமரி மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகளை அக் கட்சித் தலைவர் விஜயகாந்த் அதிரடியாக நீக்கியுள்ளார்.
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட மதுரை மாநகராட்சி 44வது வட்டச் செயலாளர் தனபால், கன்னியாகுமரி அருமனை பேரூராட்சி செயலாளர் ஸ்டீபன், அவைத் தலைவர் அச்சுதன், மாவட்ட பிரதிநிதி இம்மானுவேல் ஆகியோர் கட்சியில் அவரவர் வகித்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பேரூராட்சிப் பகுதிகளில், தலைவர் பதவிக்கு காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக வார்டுகளில் தே.மு.தி.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்றும், உள்ளூர் நிர்வாகிகள் வாய்மொழி ஒப்பந்தம் போட்டுக் செயல்பட்ட்டு வருகின்றனர். மேலும், தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக விளவங்கோடு, காங்கிரஸ்
பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications