சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் உள்பட 6 பேர் கைது
சேலம்: சாலை மறியலில் ஈடுபட்ட சேலம் மாநகராட்சி திமுக கவுன்சிலர் வேட்பாளர் அருணாசுந்தர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாநகராட்சி, 7வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் அருணாசுந்தர் போட்டியிடுகின்றார். இதே வார்டில் அதிமுக சார்பில் சரவணன் என்பவர் போட்டியிடுகின்றார்.
இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் சரவணன் வீடு வீடாகச் சென்று இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்குவதற்கான டோக்கன் வழங்கி வருவதாகவும், அதை தடுத்து நிறுத்த சென்ற தன்னை மிரட்டுவதாகவும் கூறி அருணாசுந்தர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேலம் சிறைச்சாலை எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
இதையடுத்து போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் லட்சுமிப்பிரியா தலைமையிலான போலீசார் திமுக கவுன்சிலர் வேட்பாளர் அருணாசுந்தர் உள்பட 6 பேரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications