திமுக வேட்பாளரை கைது செய்ய அதிமுகவினர் நெருக்கடி
வேலூர்: வாணியம்பாடி நகர்மன்ற திமுக வேட்பாளராக சிவாஜியை கைது செய்ய அதிமுகவினர் நெருக்கடி அளிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் திமுக வேட்பாளராக சிவாஜி போட்டியிடுகிறார். தற்போதைய நகராட்சி தலைவராக உள்ள இவர் மீது திருட்டு மற்றும் கொலை வழக்குகளில் தொடர்பு இருப்பதாக அப்துல் ரகுமான் என்பவர் புகார் அளித்துள்ளனர்.இந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று விசாரிக்கப்பட்டு, சிவாஜி குற்றமற்றவர் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் உயிர்பெற்றுள்ளது. இதற்கு அதிமுக வேட்பாளர் நிலோபர் கபில் பின்னணி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த குற்றசாட்டை கையில் எடுத்து கொண்ட தேமுதிக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் பிரச்சாரத்தில் சிவாஜியை எதிர்த்து கருத்து தெரிவித்தனர். மேலும் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் திமுக வேட்பாளரை விரைவில் கைது செய்ய வேண்டும் என அதிமுக தரப்பில் போலீசாருக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அவரது மீதான குற்றசாட்டுகளை மறுத்துள்ள சிவாஜி, தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். சிவாஜிக்கு இந்த தேர்தலில் அதிக வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் அவர் மீது வழக்குகளில், சிவாஜி விரைவில் கைது செய்யப்படவும் வாய்ப்பு உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications