ஊத்தங்கரையில் நிலநடுக்கத்தால் மக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil
ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள சில பகுதியில் நேற்றிரவு 9.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சில நிமிடங்கள் தொடர்ந்த இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகளில் இருந்த மக்கள் திறந்தவெளி இடங்களுக்கும், சாலையிலும் குவிந்தனர்.லேசான இந்த நிலநடுக்கத்தில், வீடுகளில் இருந்த பொருட்கள் சிதறின.
இரவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பீதியடைந்த பொதுமக்களில் சிலர் வீடுகளுக்குள் செல்லவில்லை. சிலர் நீண்டநேரம் காத்திருந்த பின் வீடுகளுக்குள் சென்று, பயத்துடன் உறங்கினர். இந்த லேசான நிலநடுக்கத்தில் எந்த உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.












Click it and Unblock the Notifications