ஓட்டுப் போட சென்னையிலிருந்து கிளம்பியவர்கள் பஸ் கிடைக்காமல் கோயம்பேட்டில் தவிப்பு
சென்னை: உள்ளாட்சித் தேர்லில் ஓட்டுப் போடுவதற்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் கிளம்பியவர்கள் பஸ்கள் கிடைக்காததால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், திருப்பத்தூர், ஆரணி, ஆற்காடு, செய்யாறு, காஞ்சிபுரம், திருத்தணி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட இடங்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இன்று உள்ளாட்சித் தேர்தல் என்பதாலும், விடுமுறை என்பதாலும் சென்னையில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது ஊர்களுக்குச் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தனர்.
இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நள்ளிரவு நேரத்திலும் கூட்டம் அலைமோதியது.
ஆனால் பத்து மணிக்கு மேல் பேருந்துகளின் எண்ணிக்கை திடீரென குறைந்து விட்டது. இதனால் ஊருக்கு் செல்ல வேண்டியவர்கள் பேருந்து கிடைக்காமல் தவிப்புக்குள்ளாகினர். இதையடுத்து கோபமடைந்த அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு ஊர்களுக்குக் கிளம்பவிருந்த 300 பேருந்துகளை போக விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் மக்கள் அமைதியடைந்தனர். காலையி்ல மீண்டும் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்பட்டது. அதில் ஏறி பலர் ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.












Click it and Unblock the Notifications