ஓட்டுப் போட சென்னையிலிருந்து கிளம்பியவர்கள் பஸ் கிடைக்காமல் கோயம்பேட்டில் தவிப்பு
சென்னை: உள்ளாட்சித் தேர்லில் ஓட்டுப் போடுவதற்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் கிளம்பியவர்கள் பஸ்கள் கிடைக்காததால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், திருப்பத்தூர், ஆரணி, ஆற்காடு, செய்யாறு, காஞ்சிபுரம், திருத்தணி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட இடங்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இன்று உள்ளாட்சித் தேர்தல் என்பதாலும், விடுமுறை என்பதாலும் சென்னையில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது ஊர்களுக்குச் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தனர்.
இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நள்ளிரவு நேரத்திலும் கூட்டம் அலைமோதியது.
ஆனால் பத்து மணிக்கு மேல் பேருந்துகளின் எண்ணிக்கை திடீரென குறைந்து விட்டது. இதனால் ஊருக்கு் செல்ல வேண்டியவர்கள் பேருந்து கிடைக்காமல் தவிப்புக்குள்ளாகினர். இதையடுத்து கோபமடைந்த அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு ஊர்களுக்குக் கிளம்பவிருந்த 300 பேருந்துகளை போக விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் மக்கள் அமைதியடைந்தனர். காலையி்ல மீண்டும் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்பட்டது. அதில் ஏறி பலர் ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications