ஊட்டியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மரணம்
Subscribe to Oneindia Tamil
ஊட்டி: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கணேசன் வாக்குப்பதிவு நாளான இன்று திடீர் என்று மரணம் அடைந்தார்.
தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சியினர் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவதாக பல இடங்களில் புகார் கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான இடங்களில் வெப் கேமராவும் இல்லை, போதிய போலீஸ் பாதுகாப்பும் இல்லை என்று கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி பி. மணியாட்டி பகுதியில் கணேசன்(40) என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டார்.
உடல் நலக்குறைவால் அவர் இன்று மரணம் அடைந்தார்.
வேட்பாளர் ஒருவர் வாக்குப்பதிவு நாளன்று மரணம் அடைந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications