மனிதநேய மக்கள் கட்சியின் கும்பகோண அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ
கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் கடைத் தெருவில் மனிதநேய மக்கள் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு ஆம்புலன்ஸ், குளிர்பதனபெட்டி உள்ளிட்டவைகள் இஸ்லாமிய மக்களுக்கு வாடகைக்கு விடப்பட்டு வருகின்றது.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் சோழபுரம் பேரூராட்சி தலைவர் பதவிக்கும், 7 கவுன்சிலர்கள் பதவிகளுக்கும் இக்கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் இந்த கட்சி அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துவி்டடு தப்பிவிட்டனர். தீ மளமளவென பரவியதில் அலுவலகத்தின் முன்பக்கம் முற்றிலும் எரிந்து போனது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இது குறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் மனித நேய மக்கள் கட்சி நகர தலைவர் முகமது பாரூக் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications