வாக்கு சாவடிக்குக் கிளம்பிய புதிய தமிழகம் வேட்பாளர் கடத்தப்பட்டதால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் வாக்குச் சாவடிக்கு் ஓட்டுப் போட கிளம்பிய புதிய தமிழகம் வேட்பாளர் சிலரால் கடத்திச் செல்லப்பட்டார்.
வால்பாறை நகராட்சியின் 19 ம் வார்டு கவுன்சிலர் பதவிக்கு புதிய தமிகழம் சார்பில் சாமி போட்டியிடுகிறார். இன்று காலை அவர் ஓட்டுப் போட கிளம்பினார். அப்போது திடீரென வந்த ஒரு கும்பல், சாமியை காரில் ஏற்றிக் கொண்டு போய் விட்டது.
இதையடுத்து தனது செல்போன் மூலம் அவர் புதிய தமிழகம் ஒன்றியச் செயலாளர் ராம்குமாருக்குப் போன் செய்து, தான் கேரள எல்லையின் காட்டுப் பகுதியில் இருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சியினர் மத்தியில் இந்த கடத்தல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications