தீபாவளி இனாம் வாங்கிய அரவக்குறிச்சி தாசில்தார் கோவிந்தராஜ் கைது
கரூர்: கரூர் அருகே கல்குவாரி அதிபரிடம் தீபாவளி இனாம் வாங்கிய தாசில்தார் கோவிந்தராஜ் என்பவரை திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர் வீரன். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கனிம வளத்துறையின் அனுமதி பெற்று கல்குவாரி நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரை சந்தித்த அரவக்குறிச்சி தாசில்தார் கோவிந்தராஜன்(54) தீபாவளி இனாமாக 10,000 ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளனர்.
ஆனால் தான் முறையாக அனுமதி பெற்று கல்குவாரி நடத்தி வருவதால் பணம் தர முடியாது என வீரன் பதில் கூறியுள்ளார். விடாப்படியாக தாசில்தார் கோவிந்தராஜ் லஞ்சம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார்.
இது பற்றி திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் வீரன் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி ரசாயனப் பொடி தடவிய 10,000 ரூபாய் பணத்தை, அரவக்குறிச்சி தாசில்தார் கோவிந்தராஜனிடம் வீரன் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தார் கோவிந்தராஜை கைது செய்தனர்.
கரூர் தாந்தோணிமலை மில்கேட் பகுதியில் உள்ள கோவந்தராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த 4,30,000 ரூபாய் ரொக்கம், வங்கி பாஸ் புத்தகம், ஆவணங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications