பாகிஸ்தான் அதிபர் சர்தாரியின் மகனை கடத்த தீவிரவாதிகள் திட்டம்: ரஹ்மான் மாலிக்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் சர்தாரியின் மகன் பிலாவலை கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகம். இந்நிலையில் இந்த 2 இயக்கங்களும் சேர்ந்து, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோ சர்தாரி(23)யை திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறியதாவது, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோ சர்தாரியை கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். தற்போது இங்கிலாந்தில் தங்கியுள்ள பிலாவல் பூட்டோ சர்தாரி, அவ்வப்போது பாகிஸ்தான் வந்து செல்கிறார்.
இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவராக உள்ள நிலையில் இவர் பாகிஸ்தானுக்கு அடுத்த தலைவராக பொறுப்பு ஏற்க வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டே தாரீக்-இ- தலிபான் மற்றும் அல்-கொய்தா இயக்கங்கள் சேர்ந்து அவரை கடத்த திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன் ஒரு ரகசிய நிறுவனம் மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. பிலாவல் மட்டுமின்றி பாகிஸ்தானில் உள்ள மற்ற சில அரசியல் பிரபலங்களையும் கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டத்தை தகர்க்கும் பொருட்டு அரசியல் பிரபலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.












Click it and Unblock the Notifications