மோடி ஆட்கள் எனது தாயார் வீட்டுக்குள் புகுந்து ஆதாரங்களை எரித்துவிட்டனர்: சஞ்ஜீவ் பட்
அகமதாபாத்: குஜராத் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட் நேற்று ஜாமீனில் விடுதலை ஆனார். தான் சிறையில் இருந்தபோது மோடியின் ஆதரவாளர்கள் தனது தாயாரின் வீடு புகுந்து பல முக்கிய ஆதாரங்களை தீ வைத்து எரித்துவிட்டதாக பட் குற்றம்சாட்டியுள்ளார்.
கோத்ரா வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டினார் அப்போது உளவுப் பிரிவில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட்.
அந்த ஆண்டு கலவரம் உச்சத்தில் இருந்த பிப்ரவரி மாதம் முதல்வர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் கூட்டிய போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அப்போது கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் போன்கள் அல்லது கலவரக்காரர்களைப் பற்றிய புகார்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும்படி முதல்வர் மோடி தங்களுக்கு உத்தரவிட்டதாகவும் பட் தெரிவி்த்தார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 30ம் தேதி பட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பட் குஜராத் கலவரத்தில் முதல்வர் மோடிக்கு தொடர்பு இருப்பது போன்று போலி ஆவணங்கள் தயாரித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அகமதாபாத் செஷன்ஸ் நீதிமன்றம் பட்டுக்கு இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஜாமீனில் வெளியே வந்த பட் கூறியதாவது,
சட்டம் இன்னும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. நான் சிறையில் இருந்த நேரத்தில் மோடியின் ஆட்கள் எனது தாயார் வீட்டில் அத்துமீறி நுழைந்து நான் அங்கு வைத்திருந்த முக்கியமான ஆவணங்களை எரித்துவிட்டனர். அவை குஜராத் கலவரம் தொடர்பாக மோடிக்கு எதிரான ஆதாரங்கள் ஆகும்.
நான் மோடிக்கும், அவரது அரசிற்கும் அச்சுறுத்தலாக உள்ளேன். நான் பணியில் இருந்தபோது எப்போதுமே மோடியை ஒரு குற்றவாளியாக மட்டுமே தன்னால் பார்க்க முடிந்தது. காரணம் அவர் அப்படித்தான் நடந்து கொண்டார் என்றார் பட்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications