மோடி ஆட்கள் எனது தாயார் வீட்டுக்குள் புகுந்து ஆதாரங்களை எரித்துவிட்டனர்: சஞ்ஜீவ் பட்
அகமதாபாத்: குஜராத் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட் நேற்று ஜாமீனில் விடுதலை ஆனார். தான் சிறையில் இருந்தபோது மோடியின் ஆதரவாளர்கள் தனது தாயாரின் வீடு புகுந்து பல முக்கிய ஆதாரங்களை தீ வைத்து எரித்துவிட்டதாக பட் குற்றம்சாட்டியுள்ளார்.
கோத்ரா வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டினார் அப்போது உளவுப் பிரிவில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட்.
அந்த ஆண்டு கலவரம் உச்சத்தில் இருந்த பிப்ரவரி மாதம் முதல்வர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் கூட்டிய போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அப்போது கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் போன்கள் அல்லது கலவரக்காரர்களைப் பற்றிய புகார்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும்படி முதல்வர் மோடி தங்களுக்கு உத்தரவிட்டதாகவும் பட் தெரிவி்த்தார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 30ம் தேதி பட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பட் குஜராத் கலவரத்தில் முதல்வர் மோடிக்கு தொடர்பு இருப்பது போன்று போலி ஆவணங்கள் தயாரித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அகமதாபாத் செஷன்ஸ் நீதிமன்றம் பட்டுக்கு இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஜாமீனில் வெளியே வந்த பட் கூறியதாவது,
சட்டம் இன்னும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. நான் சிறையில் இருந்த நேரத்தில் மோடியின் ஆட்கள் எனது தாயார் வீட்டில் அத்துமீறி நுழைந்து நான் அங்கு வைத்திருந்த முக்கியமான ஆவணங்களை எரித்துவிட்டனர். அவை குஜராத் கலவரம் தொடர்பாக மோடிக்கு எதிரான ஆதாரங்கள் ஆகும்.
நான் மோடிக்கும், அவரது அரசிற்கும் அச்சுறுத்தலாக உள்ளேன். நான் பணியில் இருந்தபோது எப்போதுமே மோடியை ஒரு குற்றவாளியாக மட்டுமே தன்னால் பார்க்க முடிந்தது. காரணம் அவர் அப்படித்தான் நடந்து கொண்டார் என்றார் பட்.












Click it and Unblock the Notifications