தேர்தல் தகராறு: மேலூர் அருகே அதிமுக வேட்பாளருக்கு அரிவாள் வெட்டு

Subscribe to Oneindia Tamil

மேலூர்: மேலூர் அருகே தேர்தல் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் அதிமுக வேட்பாளருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். இங்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ராஜேந்திரன் என்பவருடைய மகன் முருகன் மனைவி சுதா போட்டியிடுகிறார்.

அதே பதவிக்கு மோகன் என்பவரது மனைவி சசிகலா சுயேட்சையாக களத்தில் உள்ளார்.

இவர்களுக்குள் தேர்தல் முன் விரோதம் காரணமாக திடீர் தகராறு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மேலூர் டி.எஸ்.பி. மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட கும்பலை விரட்டியடித்தனர். அப்போது கலவர கும்பல் நாலாபுறமும் சிதறி ஓடியது.

மேலும் இந்த சம்பவத்திற்கு 15வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நல்லதம்பி மகன் முருகன் தான் காரணம் எனக் கருதி அந்த வழியே வந்த அவரை ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில படுகாயமடைந்த முருகன் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+