தலாய் லாமா நாடு திரும்பக் கோரி் சீனாவில் பெண் புத்த பிக்கு தீக்குளித்து சாவு
பீஜிங்: சீனாவில் பெண் புத்த பிக்கு ஒருவர் திபெத்திய மத தலைவர் தலாய் லாமா நாடு திரும்பக் கோரியும், திபெத்தில் மதச்சுதந்திரம் வேண்டும் என்று கூறியும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திபெத்திய மத தலைவர் தலாய் லாமா உலகம் முழுவதும் பயணம் செய்து போதனை செய்கிறார். ஆனால் அவரை சீனா அடியோடு வெறுக்கிறது. அவரை துறுவு வேடத்தில் இருக்கும் நரி என்று சீனா கூறியுள்ளது. பதிலுக்கு தலாய் லாமா சீன தலைவர்களை மூளை வளர்ச்சியில்லாதவர்கள் என்று சாடியுள்ளார். இவ்வாறாக தலாய் லாமாவுக்கும், சீன தலைவர்களுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் தலாய் லாமா நாடு திரும்பக்கோரியும், திபெத்தில் மதச்சுதந்திரம் வேண்டும் என்று கூறியும் சீனாவில் ஒரு பெண் புத்த பிக்கு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சீனாவில் சிச்சுவான் மாநிலம் அபா பகுதியில் ஒரு புத்தமத பெண் துறவியர்களுக்கான பள்ளிக்கூடம் உள்ளது. அந்த பள்ளிக்கூடத்திற்கு வெளியே டென்சின் வாங்க்மோ (20) என்ற பிக்கு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டில் மட்டும் டென்சினையும் சேர்த்து மொத்தம் 9 பேர் தலாய் லாமாவுக்காக தீக்குளித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அபா பகுதியில் திபெத்தியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திபெத்திய புத்தமத சாமியாரான புங்ட்சோக்(21) தீக்குளித்து தற்கொலை செய்தார். இதையடுத்து 300 புத்தமத சாமியார்களை ராணுவம் கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications