ஜெ.வைக் காண சென்ற அதிமுகவினர் கர்நாடக எல்லையில் தடுத்து நிறுத்தம்!
ஓசூர்: முதல்வர் ஜெயலலிதாவைக் காண தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவவட்டங்களிலிருந்து ஏராளமான வாகனங்களில் பெங்களூருக்குப் படையெடுத்த அதிமுகவினரை, கர்நாடக போலீஸார் மாநில எல்லையான அத்திபலேவுடன் தடுத்து நிறுத்தி விட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று முதல் முறையாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா கோர்ட்டில் ஆஜரானார். இதை ஏதோ திருவிழா போல மாற்றி விட்டனர் அதிமுகவினர். ஜெயலலிதாவின் கார் சென்ற பாதை முழுவதும் தட்டிகளை வைத்து தடபுடல் செய்திருந்தனர் அதிமுகவினர்.
மேலும் பெங்களூரிலிருந்து பெருமளவிலான அதிமுகவினர் பரப்பன அக்ரஹாராவுக்குத் திரண்டு வந்தனர். இதனால் ஓசூர் சாலையே பெரும் பரபரப்பாக காணப்பட்டது. ஏதோ மாநாடு நடப்பது போல பரபரப்பு நிலவியது. ஆனால் போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தி சிறை வளாகத்திலிருந்து 500 மீட்டர் தொலைவிலேயே அத்தனை பேரையும் நிறுத்தி விட்டனர். சிறை வளாகத்திற்குள் பத்திரிக்கையாளர்கள் கூட அனுமதிக்ப்படவில்லை.
இந்த நிலையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கார்கள், டிராக்டர்கள், டூவீலர்கள், வேன்களில் படையெடுத்து கிளம்பினர். ஆனால் இவர்களை ஓசூரை அடுத்துள்ள கர்நாடக மாநில எல்லைப் பகுதியான அத்திபலேவுடன் போலீஸார் தடுத்து நிறுத்தினர். யாரும் உள்ளே வரக் கூடாது, அதற்கு அனுமதி இல்லை என்று போலீஸார் கூறி விட்டனர். இதனால் அதிமுகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. ஆனால் போலீஸார் அனுமதிக்க மறுத்து விட்டதால் அதிமுகவினர் பெரும் ஏமாற்றத்துடன் தமிழகப் பகுதிக்குத் திரும்பி அங்கேயே நின்று கொண்டிருக்கின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications