சென்னை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் திணறல்
சென்னை: சென்னையில் ஒரு வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை பூக்கடை என்எஸ்சி போஸ் ரோட்டில் தேவராஜ் முதலி தெருவில் உள்ள ஒரு 3 மாடி வணிக வளாகத்தில் 64 கடைகள் உள்ளன.
இதன் 3வது மாடியில் உள்ள ஒரு துணிக் கடையில் நேற்றிரவு தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து 8 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றன.
அந்தப் பகுதி 20 அடி அகலமே கொண்ட மிகக் குறுகிய சந்து தீயணைப்பு வண்டிகளால் அருகில் செல்ல முடியவில்லை. தூரத்தில் இருந்தபடியே நீரைப் பீய்ச்சி அடித்தும் தீயை காலை வரை அணைக்க முடியவில்லை.
இந்தத் தீ அருகில் உள்ள சில கடைகளுக்கும் பரவி, அவையும் எரிந்து வருகின்றன.
தீ தொடர்ந்து எரிந்து வருவதால், கட்டடத்தில் விரிசல்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் கட்டடம் இடிந்து விழுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.
தீ விபத்து நடந்த கடையின் ஜன்னல்கள் திறந்து இருந்ததால், ராக்கெட் பட்டாசு விழுந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications