தொடர் மழை: தக்காளி உள்ளிட்ட காய்கறி விலை விர்

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனாலா காய்கறி விலைகள் விர்ரென்று ஏறிவிட்டது. பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் கடந்த வாரம் ரூ.15 முதல் 20 வரை விற்ற தக்காளி இன்று ரூ.32 ஆகிவிட்டது. இதேபோன்று கத்தரிக்காய் ரூ.15ல் இருந்து ரூ.20 ஆகவும், பீன்ஸ், அவரை ரூ.15ல் இருந்து ரூ.30 ஆகவும், வெண்டைக்காய், மிளகாய், முருங்கைக்காய் ரூ.10ல் இருந்து ரூ.20 ஆகவும், வெங்காயம் ரூ.25ல் இருந்து ரூ.30 ஆகவும், பீட்ரூட் ரூ.10ல் இருந்து ரூ.16 ஆகவும், முட்டைகோஸ் ரூ.10ல் இருந்து ரூ.15 ஆகவும், மல்லி இலை ரூ.20ல் இருந்து ரூ.25 ஆகவும் உயர்ந்துள்ளது.
உள்ளூர் பல்லாரி ரூ.10, இறக்குமதி பல்லாரி ரூ.20, பூசணி ரூ.10 ஆகியவை சீரான விலையில் உள்ளன. கிலோ ரூ.60க்கு விற்ற மாங்காய் ரூ.50 ஆக குறைந்துள்ளது. தொடர் மழையால் பாவூர்சத்திரத்தில் கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், மல்லி இலை மகசூல் வெகுவாக பாதிக்கப்பட்டதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications