என்ஜிஓ நிறுவனத்திடம் கூடுதலாக வசூலித்த பணத்தைத் திருப்பித் தருவதாக கிரண் பேடி கடிதம்

சமீபத்தில் கிரண் பேடி குறித்த சர்ச்சை வெடித்தது. அவர் தான் பேசச் செல்லும் இடங்களுக்கு விமான பயணம் மேற்கொள்ளும்போது, எக்கானமி கிளாஸில்தான் செல்கிறார். ஆனால் தனக்காக டிக்கெட் எடுக்கும் நிறுவனங்களிடம் பிசினஸ் கிளாஸுக்கான பணத்தை வாங்கிக் கொள்கிறார் என்று அந்த பரபரப்பு சர்ச்சை தெரிவித்தது. ஆனால் இந்தப் புகாரை கிரண் பேடி மறுத்தார்.
இந்த நிலையில் இந்தூரைச் சேர்ந்த அபியாஸ் மண்டல் என்ற தொண்டு நிறுவனம் கிரண் பேடிக்கு ஒரு கடிதம் எழுதியது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் சிவாஜி மொஹிதே கூறுகையில், கடந்த 2009ம் ஆண்டு மே 13ம் தேதி எங்களது நிறுவனத்தில் உரை நிகழ்த்த கிரண் பேடியை அழைத்திருந்தோம்.
டெல்லியிலிருந்து இந்தூருக்கு 2 நாள் வந்து செல்வதற்காக பிசினஸ் கிளாஸுக்கான டிக்கெட் கட்டணமாக ரூ. 38,871 கொடுக்கப்பட்டது. காசோலை மூலம் இதைக் கொடுத்தோம்.
சமீபத்தில் கிரண் பேடி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த பத்திரிக்கைச் செய்திகளைப் படித்தவுடன், எங்களிடமிருந்து கூடுதலாக வசூலித்த பணத்தைத் திருப்பி அனுப்புமாறு கோரி அவருக்குக் கடிதம் எழுதியிருந்தோம்.
இதற்கு கிரண் பேடி பதில் மெயில் அனுப்பியுள்ளார். அதில் தனக்குக் கூடுதலாக தரப்பட்ட பணத்தைத் திருப்பித் தந்து விடுவதாக அவர் உறுதியளித்துள்ளார் என்றார்.
முன்னதாக இந்தப் புகார் குறித்து கிரண் பேடி கூறுகையில், நான் கூடுதலாக பணம் வசூலிக்கவில்லை. மாறாக, நான் பிசினஸ் கிளாஸில் பயணிப்பதாக கருதி என்னை அழைப்பவர்கள்தான் அதற்குரிய கட்டணத்தைக் கொடுக்கின்றனர். அதேசமயம், எனக்குக் கூடுதலாக தரப்படும் பணத்தை நான் வைத்துக் கொள்வதில்லை. மாறாக எனது இந்தியா விஷன் பவுண்டேஷன் அறக்கட்டளைக்காக பயன்படுத்துகிறேனே தவிர எனது சுய நலனுக்காக நான் பயன்படுத்துவதில்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications