நெல்லை கோவில்களில் ராஜபக்சேவின் சகோதரி கணவர் வழிபாடு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டத்திற்கு வந்துள்ள ராஜபக்சேவின் சகோதரி கணவர் திருக்குமரன் நடேசன் அங்குள்ள கோவில்களுக்குச் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.

ராஜபக்சேவின் ஒன்று விட்ட சகோதரி நிரூபமா. இவரது கணவர்தான் திருக்குமரன் நடேசன். இவர் தனது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களோடு அவ்வப்போது தமிழகம் வந்து சாமி கும்பிட்டுச் செல்வது வழக்கம்.

அதன்படி தற்போதும் அவர் நெல்லை வந்துள்ளார். பாபநாசம் சிவன்கோவில் மற்றும் அகஸ்தியர் தீர்த்த அருவிப் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு அவர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நண்பர்களுடன் வந்து சாமி கும்பிட்டார். சிறப்பு ஆராதனை மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 25 வருடமாக திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவில் நாங்கள் பங்கேற்று வருகிறோம். மேலும் இது அரசியல் பயணமல்ல, ஆன்மீக பயணம் மட்டுமே என்று கூறிவிட்டுக் கிளம்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+