அத்துமீறும் சீனாவை அடக்க இந்திய ராணுவத்துக்கு 1 லட்சம் கூடுதல் வீரர்கள்

இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் வீரர்களை இந்திய ராணுவம் பணியில் சேர்க்கவுள்ளது.
அருணாசல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, காஷ்மீரின் லடாக் பகுதியில் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானுக்காக சாலை போடும் பணியை சீனா மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து சீன எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த ரூ. 64,000 கோடி செலவில் பிரமாண்ட திட்டத்தை இந்திய ராணுவம் வகுத்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன் நிதியமைச்சக அதிகாரிகளுடன் மற்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் இது தொடர்பான விரிவான ஆலோசனை நடத்தினர்.
முதல் கட்டமாக காஷ்மீரின் லடாக் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் இரு புதிய படைப் பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன. வரும் 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ராணுவத்துக்கு 1 லட்சம் பேரை புதிதாக சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் வீரர்கள் படிப்படியாக எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். சீன எல்லையில் 4 புதிய படைப் பிரிவுகளும் அமைக்கப்படவுள்ளன.
மேலும் எல்லைப் பகுதி படையினருக்கு சிறிய வகை பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவையும் கூடுதல் எண்ணிக்கையில் வழங்கப்படவுள்ளன.
கடந்த 1962ம் போருக்குப் பின் எல்லைப் பாதுகாப்பு படையினருக்காக இந்த அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இப்போது இந்திய ராணுவத்தில் 11 லட்சம் படை வீரர்களும் 35,000 அதிகாரிகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications