நில மோசடி வழக்கில் நாகர்கோவில் தேமுதிக நகர செயலாளர் ஜெயசீலன் கைது
நாகர்கோவில்: போலி பத்திரம் தயாரித்து நிலமோசடி செய்த நாகர்கோவில் தேமுதிக நகர செயலாளர் ஜெயசீலனை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தோப்பூர் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கபோஸ். இவருக்குச் சொந்தமாக 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை நாகர்கோவில் நகர தேமுதிக செயலாளர் ஜெயசீலன் என்பவர் போலி பத்திரம் மூலம் விற்பனை செய்ததாக நாகர்கோவில் காவல் நிலையத்தில் தங்கபோஸ் புகார் மனு அளித்தார்.
அவர் கொடுத்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகர்கோவில் நகர தேமுதிக செயலாளர் ஜெயசீலன் போலி பத்திரம் தயாரித்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போலீசார் ஜெயசீலனை கைது செய்தனர்.
நில மோசடி வழக்கில் இதுவரை திமுக மற்றும் காங்கிரஸ் புள்ளிகள் தான் சிக்கி வந்தனர். இந்த நிலையில் தற்போது தேமுதிக பிரமுகர்களும் சிக்கி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications