எனது தந்தையை திட்டினால் நான் சும்மா இருக்க மாட்டேன்- ராம்தேவுக்கு திக்விஜய் சிங் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

Ramdev and Digvijay Singh
டெல்லி: எனது தந்தையை ராம்தேவ் விமர்சிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. என்னை ராட்சசின் மகன் என்று ராம்தேவ் கூறியிருப்பது உச்சகட்ட அவதூறுப் பேச்சாகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

பாபா ராம்தேவையும், அன்னா குழுவினரையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் திக்விஜய் சிங். அதிலும் ராம்தேவைத்தான் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ராம்தேவ், திக்விஜய் சிங் ஒரு முட்டாள். மன நிலை சரியில்லாதவர். ராட்சசனின் மகன். இந்திய துறவிகள் சரித்திரம், வரலாறு, கலாச்சாரம் தெரியாதவர். சாத்தானின் பிள்ளைகளான இவரைப் போன்றவர்கள் குறித்து நான் இதற்கு மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கடுமையாக சாடியிருந்தார்.

இந்தக் கருத்துக்கு திக்விஜய் சிங் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். ராம்தேவின் விமர்சனம் குறித்து அவர் கூறுகையில், என்னை ராட்சசனின் மகன் என்று ராம்தேவ் கூறியிருப்பது உச்சகட்ட அவதூறுப் பேச்சாகும். இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மரியாதைக்குறைவான, தரக்குறைவான பேச்சு இது.

என்னைப் பற்றி அவர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். ஆனால் எனது தந்தையை இழிவுபடுத்துவதை நான் பொறுக்க முடியாது என்றார் கடுமையாக.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+