நெல்லையில் காலியாகும் திமுக கூடாரம் - ஒவ்வொருவராக அதிமுக வில் இணைகின்றனர்
செங்கோட்டை: நெல்லை மாவட்டத்தில் திமுக முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் குருக்கல்பட்டி ராஜா அதிமுக வில் இணைந்தார். நெல்லையில் படிப்படியாக அதிமுகவில் இணைவது தொடர்கதையாவதால் கலக்கத்தில் உள்ளனர் உடன்பிறப்புக்கள்.
நெல்லை மாவட்ட திமுக முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவராக இருந்தவர் குருக்கள் பட்டி ஏ ராஜா . இவர் சனிக்கிழமையன்று தமிழக கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் ராஜா பி செந்தூர்பாண்டியன் முன்னிலையில் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
இந்நிகழ்ச்சியின் போது மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான எஸ்முருகையா, ஒன்றிய மாணவரணி செயலாளர் ஆர் சீனிவாசன், ஒன்றிய இளைஞரணி பொருளாளர் பொன்ராஜ், மேலவை பிரதிநிதி பிச்சை பாண்டி, இளைஞர் பாசறை செயலாளர் துரைபாண்டியன், வீரப்புலி பாண்டியன், கடையநல்லூர் தொகுதி கழக இணை செயலாளர் நடராஜன், நகர்மன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications