இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 4 இலங்கை மீனவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 4 மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
ராமேஸ்வரத்தை அடுத்த கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடல் வழியாக வருவதைக் கண்டனர். இந்திய கடற்படையினர் அவர்களைப் பிடித்து விசாரித்தனர். தங்கள் படகு பழுதாகிவிட்டதால் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர். அந்த 4 பேரும் மண்டபம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடலோர காவல்படை கமாண்டர் ஹிஷ் தெரிவித்தார்.
இதேபோல கடந்த மாதம் இந்திய எல்லைக்குள் நுழைந்த 6 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications