சொந்த கட்டிடங்களில் காவல் நிலையங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சொந்த கட்டடம் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக ரூ.5 கோடியே 14 லட்சம் செலவில் 11 காவல் நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒரு மாநிலம் வளர்ச்சி பெற வேண்டும் எனில், அந்த மாநிலத்தின் மக்கள் வளம்பெற வேண்டும் எனில், மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும். ஒரு மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும் எனில், அங்கு அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும்.
மாநிலத்தில் அமைதியான சூழ்நிலை நிலவுவதை உறுதி செய்வதில் காவல்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. மாறிவரும் சமூகச் சூழ்நிலைக்கேற்ப புதுமையும் திறமையும் பெற்ற காவல்துறையாக, தமிழக காவல்துறையை மாற்றுவதில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்கள்.
வாடகை கட்டடங்களில் இயங்கும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் உரிய இடம் தேர்வு செய்யப்பட்டு ஐந்து ஆண்டு காலத்திற்குள் அவை அனைத்தும் சொந்தக் கட்டடங்களிலேயே இயங்க வகை செய்யும் வகையில் புதிய கட்டடங்கள் கட்டப் படவேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு, 11 காவல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்ட முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.
11 காவல் நிலையங்களுக்கு கட்டடம்
மேலும் தற்போது, கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி தாலுகாவில் நகர காவல் நிலையம்; தேனி மாவட்டத்தில் குரங்கணி ஊரக காவல் நிலையம்; ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரம் கோயில் சிறப்பு ஊரக வகை காவல் நிலையம்; பாம்பன் சிறப்பு ஊரக வகை காவல் நிலையம்; கீழச்செல்வனூர் ஊரக காவல் நிலையம்; சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி தெற்கு சிறப்பு ஊரக வகை காவல் நிலையம்; திருக்கோஷ்டியூர் ஊரக காவல் நிலையம்; திருநெல்வேலி மாவட்டத்தில் குருவிக்குளம் நகர காவல் நிலையம்; நாங்குநேரி, அனைத்து மகளிர் காவல் நிலையம்; தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி மேற்கு சிறப்பு வகை காவல் நிலையம்; மதுரை நகரில், நு1 கே.புதூர் நகர காவல் நிலையம்; ஆக மொத்தம், 11 காவல்நிலையங்களுக்கு, 5 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடங்களை கட்ட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications