For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீன்பிடிப்பதற்காக மீனவர்களை சுட்டுத்தள்ளும் ஒரே நாடு இலங்கைதான்: தா. பாண்டியன்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மீனவர்களை தாக்குவதன் மூலம் இலங்கை இந்தியாவுக்கு எதிராக அறிவிக்கப்படாத யுத்தம் நடத்துகிறது. கடலில் மீன் பிடிப்பதற்காக மீனவர்களை சுட்டுத் தள்ளும் ஒரே நாடு இலங்கை தான் என்று இந்திய ம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தா. பாண்டியன் கலந்து கொண்டார்.

கூட்டம் முடிந்த பின் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகிறது. கடலில் மீன் பிடிப்பதற்காக அவர்களை சுட்டுத்தள்ளும் ஒரே நாடு இலங்கை தான். இவ்வாறு தொடர் தாக்குதல் நடத்துவதன் மூலம் இலங்கை இந்தியாவுக்கு எதிராக அறிவிக்கப்படாத யுத்தம் நடத்துகிறது என்றே வைத்துக் கொள்ளலாம். நேச நாடு என்று சொல்லிக் கொள்ளும் எந்த நாடாவது இவ்வாறு செய்யுமா என்றார்.

English summary
CPI state secretary Tha. Pandian has told that Sri Lanka is waging an unannounced war against India by attacking TN fishermen. Sri Lanka is the only nation that shoots fishermen for fishing in the sea, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X